பெண்கள் மட்டும் உடனே விண்ணப்பியுங்க... தமிழகம் முழுவதும் 8280 சமையல் உதவியாளர் பணியிடங்கள்…. !

தமிழக அரசின் சத்துணவு திட்டத்தின் கீழ், பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் 8280 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனத்தின் அடிப்படையில் மாவட்ட வாரியாக நிரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த வேலைக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2025 ஏப்ரல் 29ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
தகுதி மற்றும் ஊதியம் விவரம்: விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக பேசத் தெரிந்திருந்தால் போதுமானது.
வயது வரம்பு : 21 முதல் 40 வயது வரை முதல் ஒரு வருடத்திற்கு தொகுப்பூதியம்.
பின்னர் ரூ.3000 முதல் ரூ.9000 வரை சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ்கள் (10ஆம் வகுப்பு சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார், சாதிச் சான்று, வாக்காளர் அட்டை உள்ளிட்டவை) இணைத்து, ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி அலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு : நேர்முகத் தேர்வு மூலமாக பணியிடங்கள் நிரப்பப்படும். நேர்காணலுக்கு அழைக்கப்படும் போது, அசல் சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!