அச்சச்சோ... இளைஞரின் நுரையீரலும், வயிற்றிலும் சிக்கியிருந்த 7 ஆணிகள்!

பொதுவாக அறுவை சிகிச்சையின் போது கத்தியையோ, கத்திர்க்கோலையோ, ஊசி சிரஞ்சையோ வயிற்றுக்குள் வைத்து மருத்துவர்கள் மறந்து போய் தையல் போடுவது பல இடங்களில் நிகழ்ந்துள்ளது. ஆனால் இது வேறு வகையான விநோதமான சம்பவமாக இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் பிம்பிரி மருத்துவமனையில், தவறுதலாக ஆணியை விழுங்கி விட்டதாக கூறி இளைஞர் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அந்த இளைஞருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது நுரையீரல் மற்றும் வயிறு பகுதிகளில் ஆணி இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் ஆபரேஷன் செய்ய முடிவு செய்த நிலையில் கிட்டத்தட்ட 3 மணி நேரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இந்த அறுவை சிகிச்சையின் போது வெற்றிகரமாக 7 ஆணிகள் அகற்றப்பட்டு இளைஞர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஒருவர் ஐந்து அடி நீளம் உள்ள தையல் ஊசியை விழுங்கிவிட்ட நிலையில் அவருக்கு மருத்துவர்கள் ஆப்ரேஷன் செய்து அந்த ஊசியை அகற்றிய நிலையில் தற்போது ஆணியை ஒருவர் விழுங்கி விட்டதாக ஆப்ரேஷன் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!