அச்சச்சோ... கொடூரம்... இளம்பெண்ணின் நாக்குத் தொண்டையைக் கிழித்தெறிந்த பல் டாக்டர்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசியாபாத் மாவட்டம் ஷாலிமார் கார்டன் பகுதியில் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் ஷில்பி பாண்டே என்ற பெண் பல் அகற்று சிகிச்சைக்காக ஒரு பல் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டார். சிகிச்சையின் போது அவருக்கு 3 முறை அனஸ்தீசியா கொடுக்கப்பட்டது.
அதன்பின் சிகிச்சை முடிந்து உணர்வு திரும்பியதும் கடும் வலி ஏற்பட்டதால் பேச முடியவில்லை. வலியால் மிகக் கடுமையாக அவதிப்பட்டுள்ளார். மேலும் வாயை திறக்கும் போது, எச்சிலை துப்பும் போதும் பற்கள் மட்டுமல்லாமல் வாயில் உள்ள நாக்கு , தொண்டை சதை பகுதிகள் கிழிந்து விழுந்துவிட்டன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் டெல்லியில் அதே பகுதியில் உள்ள வேறொரு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஷில்பி பாண்டே அந்த பல் மருத்துவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த மருத்துவர் ரூ 1500 பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என மிரட்டல் விடுத்திருப்பதாக ஷில்பி பாண்டே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் பல் மருத்துவர் உஜ்ஜுவல் கரவாலை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!