'ஆப்ரேஷன் செயூதா'... சத்தீஸ்கரில் 14 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கரில் 'ஆப்ரேஷன் செயூதா' நல்ல பலன் கொடுத்து வருகிறது. மாவோயிஸ்ட் அமைப்பினர் திருந்தி வாழ ஒரு வாய்ப்பாக இது பார்க்கப்படுகிறது. தெலங்கானா மாநிலத்தில் பத்ராத்ரி கொதாகுதெம் மாவட்டத்தின் காவல் துறை உயர் அதிகாரியான் பி.ரோஹித் ராஜுவின் முன்னிலையில் சத்தீஸ்கரில் செயல்பட்டு வந்த தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் 14 உறுப்பினர்கள் நேற்று சரணடைந்துள்ளனர்.
இதில் அந்த அமைப்பின் பகுதி ஆணைய உறுப்பினர்களாகச் செயல்பட்டு வந்த 2 உயர்நிலை மாவோயிஸ்டுகளும் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரணடையும் மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடியின மக்களின் நல்வாழ்விற்காக காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் நடத்தி வரும் 'ஆப்ரேஷன் செயூதா' எனும் திட்டத்தின் நன்மைகளை அறிந்து அவர்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாக காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதே போல், மாவோயிஸ்ட் நடவடிக்கைகளைக் கைவிட்டு சாதாரண வாழ்க்கையை வாழ விரும்பும் நபர்கள் நேரடியாகவோ அல்லது தங்களின் குடும்பத்தினர் மூலமாகவோ அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது மாவட்ட உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!