'ஆபரேஷன் சிந்தூர்' தொடரும்... அனைத்து கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு தகவல்!

 
ஆபரேஷன் சிந்தூர்


பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது என்றும் எல்லைப் பகுதிகளில் நிலைமை வேகமாக மாறி வருகிறது என்றும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில் நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். 

ஆபரேஷன் சிந்தூர்

கூட்டத்தில், உள் துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் எம்பி சந்தீப் பந்தோபாத்யாய, திமுக எம்பி டி.ஆர்.பாலு, சமாஜ்வாதி கட்சி எம்பி ராம் கோபால் யாதவ், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், சிவ சேனா(யுபிடி) எம்பி சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ்(எஸ்பி) எம்பி சுப்ரியா சுலே, பிஜூ ஜனதா தள எம்பி சஸ்மித் பத்ரா, சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ், ஐக்கிய ஜனதா தள எம்பி சஞ்சய் ஜா, ஏஐஎம்ஐஎம் எம்பி அசாதுதின் ஒவைசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர், “பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. எல்லைப்பகுதிகளில் நிலைமை தொடர்ந்து மாறிவருகிறது” என்று தெரிவித்தார். 

அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், “நாடு ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கும் போது அனைத்து அரசியல் தலைவர்களும் முதிர்ச்சியைக் காட்டினர். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்க உறுதிபூண்டுள்ளன. எம்.பி.க்களிடமிருந்து சில ஆலோசனைகள் வந்தன” என தெரிவித்தார்.

அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "அரசாங்கத்திற்கு நாங்கள் எங்களின் முழு ஆதரவினையும் அளித்துள்ளோம். மல்லிகார்ஜுன் கார்கே கூறியதுபோல், நாங்கள் விவாதிக்க விரும்பாத சில விஷயங்கள் இருப்பதாக அரசு கூறியது" என்றார்.

ஆபரேஷன் சிந்தூர்

முன்னதாக பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்த சில தினங்களில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. அப்போது தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிக்கப்போம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் இன்று மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web