தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அதீத கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (ஜன. 7) தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுத் தமிழகக் கடற்கரையை நோக்கி நகரத் தொடங்கும். இதன் காரணமாக வரும் ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, கீழ்க்கண்ட நாட்களில் இந்த மாவட்டங்களில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது:
ஜனவரி 9 (வெள்ளிக்கிழமை): 1. மயிலாடுதுறை 2. திருவாரூர் 3. தஞ்சாவூர் 4. நாகப்பட்டினம் 5. புதுக்கோட்டை (மற்றும் காரைக்கால் பகுதிகள்)
ஜனவரி 10 (சனிக்கிழமை): 1. செங்கல்பட்டு 2. விழுப்புரம் 3. கடலூர் (மற்றும் புதுச்சேரி) ஆகிய மாவட்டங்களில் கனமழை (மஞ்சள் அலர்ட்) எச்சரிக்கையும்,
மிகக் கனமழை பெய்யும் மாவட்டங்கள் தவிர, பிற மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜனவரி 9: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம்.
ஜனவரி 10: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள்.
ஜனவரி 11: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் விழுப்புரம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
