பத்மவிபூஷன் விருது பெற்ற அணு விஞ்ஞானி சீனிவாசன் காலமானார்... தலைவர்கள் இரங்கல்!
பிரபல அணு விஞ்ஞானி சீனிவாசன் வயது மூப்பு மற்றும் உடல்நல குறைபாடு காரணமாக காலமானார். இவருக்கு வயது 95. இவர் Atomic energy commission முன்னாள் தலைவர் M.R. சீனிவாசன். ஊட்டியில் உடல் நலக்குறைவால் காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் 1955 ம் ஆண்டு ஹோமி பாபா உடன் இணைந்து நாட்டின் முதல் அணுசக்தி ரியாக்டரை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தவர். அதன் பின்பல முக்கிய பொறுப்புகளை வகித்த இவர் 1987 ம் ஆண்டு AEC தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்தியாவுக்காக இவர் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு இவருக்கு 2015ல் பத்மவிபூஷன் விருது வழங்கியது. இவரது மறைவுக்கு தற்போது தலைவர்கள், பிரபலங்கள், விஞ்ஞானிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
