படுக்கப்பத்து முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம், திருவிளக்கு பூஜை!!
தமிழகத்தின் தென் பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் கும்பாபிஷேகம், கொடைவிழாக்கள் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகின்றன. பணி நிமித்தமாக வெளியூர் , வெளிநாடுகளில் தங்கியிருப்பவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக வந்து சேர்ந்துவிடுவர்.இதனால் திருவிழாக்கள் களைகட்டும். நகரத்து திருவிழாக்களை காட்டிலும் கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்கள் உணர்வுப்பூர்வமாக பக்தி பரவசத்துடன் கொண்டாடப்படும் .
இதனை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடிவிடுவர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள படுக்கப்பத்து வடக்குத் தெரு பெரிய முத்தாரம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது.
இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் , கோவில் நிர்வாகக் குழுவினர் உட்பட பலர் திரளாக கலந்து அம்பிகையின் தரிசனம் பெற்று வழிபாடு செய்தனர். தொடர்ந்து ஆத்ம சைதன்ய பீடம் மகா ப்ரந்தியங்கிரா தேவி குரு ஆத்ம சைதன்யா மஹராஜ் ஆசியுரை வழங்கினார். மாலையில் கோவில் வளாகத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் சுற்றுவட்டார கிராமத்து பெண்கள் பலரும் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி அம்பாளை வழிபட்டனர். இரவு 7 சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!