பகீர் வீடியோ... நான் பாலத்தின் மேல் நின்று தற்கொலை செய்யப் போவதாக இளைஞர் மிரட்டல்!

 
பகீர் வீடியோ... நான் பாலத்தின் மேல் நின்று தற்கொலை செய்யப் போவதாக இளைஞர் மிரட்டல்! 

 

 

கேரளா மாநிலத்தில் மலப்புரம் மாவட்டத்தில் பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்த அந்த இளைஞர், உணர்ச்சிவசப்பட்ட நிலையில், தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளார். இதனையடுத்து பாலத்தின் உயரமான பகுதியில் நின்று மிரட்டல் விடுத்தார்.

 

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு மாறாடு காவல்துறையினர் விரைந்து சென்று இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு காவல் அதிகாரி தம்பி தற்கொலை தீர்வு அல்ல என கூறினார். 

வாழ்க்கையின் மதிப்பையும், எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் முன்னேறுவதற்கான வழிகளையும் எடுத்துரைத்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இளைஞர் தனது முடிவை மாற்றிக்கொண்டு, காவல்துறையினரின் உதவியுடன் பாதுகாப்பாக பாலத்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்டார். தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வாக இருக்க முடியாது என்பதை வலியுறுத்திய காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web