பகீர்... 40 நிமிஷம்... இன்ஸ்டாவில் கணவன் தற்கொலை செய்து கொள்வதை நேரலையில் பார்த்த மனைவி மாமியார்!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டத்தில் வசித்து வருபவர் சிவப்பிரகாஷ் திரிபாதி . இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக பிரியா சர்மா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் பிரியாவுக்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ள நிலையில் இந்த விவகாரம் அவருடைய கணவருக்கு தெரியவந்தது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.
இந்நிலையில் சிவபிரகாசுக்கு திடீரென ஒரு விபத்து ஏற்பட்டதால் அதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்தார்.அந்த சமயத்தில் அவருடைய மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார் .இதனால் மன உளைச்சலில் இருந்து சிவப்பிரகாஷ் 16ம் தேதி இன்ஸ்டாகிராம் லைவில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதை அவருடைய மனைவியும் மாமியாரும் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சுமார் 44 நிமிடங்கள் இன்ஸ்டாகிராமில் லைவில் வீடியோ போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனை தடுக்க முயற்சிக்காமல் அவருடைய மனைவியும் மாமியாரும் செல்போனில் வேடிக்கை பார்த்தபடியே இருந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது அவருடைய மாமியார் மற்றும் மனைவியை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!