இறங்கி அடித்த இந்தியா.. எமர்ஜென்சியை அறிவித்த பாகிஸ்தான்!

இந்தியாவில் நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாலை முதல் இந்தியா ஆபரேஷன் சிந்தூரை தொடங்கியுள்ளது. இருநாட்டு எல்லைகளுக்கிடையே பதற்றம் அதிகரித்து வந்தது. 'ஆபரேஷன் சிந்துார்' கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்தியா தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தாக்குதலில் ஒன்றாக இது கருதப்பட்டது. இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.இந்தத் தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் மீது இந்தியா பதிலடி தர வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.
இதற்கிடையே 'ஆபரேஷன் சிந்துார்' கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்தியா தாக்குதலை நடத்தியுள்ளது. தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. லாகூர் உட்பட பாகிஸ்தான் விமான நிலையங்களில் 48 மணி நேரம் செயல்பாடுகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இந்தியாவின் ராணுவ தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார். இதற்காக இன்று பாகிஸ்தான் பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டமும் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!