இந்தியாவுடன் போருக்கு ஆயத்தமாகும் பாகிஸ்தான்... சிம்லா ஒப்பந்தம் ரத்து, இந்திய விமானங்கள் பறக்கத் தடை!

இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதலை அடுத்து இரு நாட்டு எல்லைகளில் போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்த நிலையில், பதில் நடவடிக்கையாக சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.
சிம்லா நதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்த பாகிஸ்தான், இதனைப் போராகக் கருதுவதாகத் தெரிவித்துள்ளது.1971ம் ஆண்டில் ஏற்பட்ட போரை நிறுத்தும்வகையில், 1972-ல் சிம்லா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
சிம்லா ஒப்பந்தத்தின்படி, முக்கிய அம்சங்களாக, இருநாடுகளும் தங்கள் நாட்டுப் போர்க்கைதிகளை அமைதியான முறையில் விடுவிக்க வேண்டும். இரு நாடுகளின் எல்லைகளை அமைதியான முறையில், பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்க வேண்டும்; எல்லைப் பிரச்னைகளையும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்.
பெஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசாக்களை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. தொடர்ந்து, இந்தியாவிலுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த பாதுகாப்பு, ராணுவம், விமானம், கடற்படை ஆலோசகர்கள் ஒருவாரத்துக்குள் வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா மீது பாகிஸ்தானும் சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்தத் தடை, இந்தியாவுடன் அனைத்து வகை வர்த்தகங்களும் நிறுத்தம் முதலான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!