பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் யூடியூப் சேனலுக்கு தடை... இந்தியா அதிரடி!

இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியாவை குறித்து தவறான செய்திகள், மத மோதல்களை தூண்டும் விதமாக செய்திகளை வெளியிட்டதால் பாகிஸ்தானை சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியா தடை விதித்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் யூடியூப் சேனலுக்கும் இந்தியா தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை பராமரிக்கும் வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!