குடியிருப்பு பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரோன் பாகங்கள்!

பாகிஸ்தான் இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும், ஜம்முவின் ரஜோரி, உரி, அக்னூர் பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஜம்முவில் உள்ள பொது மக்கள் வீடுகளை குறி வைத்து பாகிஸ்தான் இராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், இன்று காலை 5 மணிக்கு அமிர்தசரஸின் காசா காண்ட் மீது பறந்த பாகிஸ்தான் டிரோன்களை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அழித்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
#WATCH | Punjab: Visuals of hollowed ground in a field in Chhichhra village of Gurdaspur. As per Police, an explosion sound was also heard here earlier this morning.
— ANI (@ANI) May 10, 2025
Inspector Jasvinde Pal Singh says, "...It happened around 4.45 am. No loss has occurred. All officers, including… pic.twitter.com/oI2QvFXe5p
இந்திய இறையாண்மையை சீர்குலைத்து, இந்திய மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பாகிஸ்தான் அப்பட்டமான முயற்சியை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய ராணுவம் குறிப்பிட்டுள்ளது. எதிரிகளின் திட்டங்களை இந்திய ராணுவம் முறியடிக்கும் என உறுதியளித்துள்ளது.
இப்படி இந்தியா மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை இந்தியா இடைநிறுத்தி தடுத்து அழித்துள்ளது. இதனால், ஆங்காங்கே ஏவுகணை பாகங்கள் சிதறி கிடக்கின்றன. இந்திய ராணுவத்தின் தாக்குதலில் சிதைந்து கிடக்கும் பாகிஸ்தான் பஞ்சாப்பின் ரஹிம் யார் கான் விமான தளத்தின் வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓடுபாதையில் இந்திய ஏவுகணை தாக்கியதாக கூறப்படும் சூழலில், பெரிய பள்ளம் ஒன்றும் ஏற்பட்டுள்ளது.
மேலும், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கிராமப்புறத்தில் உள்ள வயலில் இடைமறிக்கப்பட்ட பாகிஸ்தான் ஏவுகணையின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் இருந்து சேதமடைந்த ஒரு பாகிஸ்தான் ஏவுகணையின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன, பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தில் உள்ளனர்.
அரியானாவின் சிர்சாவில் இந்தியாவால் இடைமறிக்கப்பட்ட பாகிஸ்தான் ஏவுகணையின் பாகங்கள் பாதுகாப்புப் படையினரால் மீட்டெடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே பாகிஸ்தானின் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!