பாகிஸ்தான் நாடு வரைப்படத்தில் இருக்காது... அண்ணாமலை பேட்டி!

பாகிஸ்தான் நாடு வரைப்படத்தில் இருக்காது. இந்தியா அறத்தின் அடிப்படையில் தான் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாகிஸ்தான் இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்களை கொலை செய்துள்ளனர். துணை ஆட்சியர் நிலையில் உள்ள அதிகாரியையும் கொலை செய்துள்ளனர். டிரோன்களை நமது நாட்டுக்குள் அனுப்பி தாக்குதல் நடத்திய உள்ளனர்
இந்தியா, பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்த தவறுக்கு பாகிஸ்தானில் இருக்கக்கூடிய தீவிரவாதிகள் மீது மட்டும் தாக்குதல் நடத்துகின்றனர். ஆனால் பாகிஸ்தான் இந்தியாவில் உள்ள அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. நாம் எந்த நாட்டின் எல்லையை பிடிப்பதற்காக சண்டை போடவில்லை. நமது நாட்டு மீது நடத்தப்பட்டுள்ள தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கிறோம்.
இந்தப் போர் இன்றோ, நாளையோ முடிவடைய போவது கிடையாது. இந்தப் போர் தீவிரவாதத்திற்கு எதிராக நடக்கிறது. இந்தியாவின் நடவடிக்கை பார்த்த பிறகு பாகிஸ்தான் இந்தியாவில் ஓர் உயிரை எடுப்பதற்கு பயப்பட வேண்டும். பாகிஸ்தான் நாடு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. ராணுவம் தான் அந்த நாட்டு அரசை கட்டுப்படுத்துகிறது.
நாட்டுக்கு ராணுவம் அல்ல. ராணுவத்திற்கு ஒரு நாடு. பாகிஸ்தான் ஒரு பெரிய நாடே கிடையாது. இந்தியாவின் பொருளாதாரத்தில் 12ல் ஒரு பங்கு கொண்ட நாடு. பாகிஸ்தான் என்ற நாடு வரைபடத்தில் இருக்காது. தமிழகத்தில் ராணுவ வீரர்களுக்காக முதல்வர் முன்னெடுக்கும் பேரணி வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் முதல்வரும் இந்திய அரசுக்கு இந்த நேரத்தில் தனது முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும்” என்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!