இந்தியாவில் பாகிஸ்தானின் எக்ஸ் பக்கம் முடக்கம்.!

 
எக்ஸ்
 இந்தியாவில்  ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட  பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியாவில்  பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கம்  முடக்கப்பட்டது. இந்தியாவில் தவறான தகவலைப் பரப்புவதைத் தடுக்கும் வகையில்  மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கணக்கை இடைநிறுத்துமாறு சமூக ஊடக தளமான X-ஐ மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

ஜம்மு

அந்த கோரிக்கைக்கு இணங்க, பாகிஸ்தான் அரசு  எக்ஸ் வலைத்தளம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.இந்தியாவிலிருக்கும்  பயனர்களால் பாகிஸ்தானின் எக்ஸ் கணக்கை  அணுக முடியாது. இதனிடையே, கராச்சி கடலோரப் பகுதியிலிருந்து ஏவுகணை நடத்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.  இன்றும், நாளையும் நடைபெறும் அந்த சோதனை நடவடிக்கைகளை இந்தியா கண்காணித்து வருகிறது.

அந்த வகையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானை ராணுவ ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் பழிவாங்க இந்தியா திட்டமிட்டு வருவதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   இதன் ஒரு பகுதியாக, நேற்றைய தினமே, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.  

ஜம்மு காஷ்மீர்
 இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானியருக்கு இந்திய விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியரின் விசாக்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web