பாகிஸ்தான் நடிகைக்கு இந்தியாவில் இருந்து தண்ணீர் பாட்டில்களை பார்சலில் அனுப்பி வைத்த ரசிகர்!

பாகிஸ்தானின் பிரபல நடிகை நடிகை ஹனியா அமீருக்கு, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து தண்ணீர் பாட்டில்களை இந்திய ரசிகர் ஒருவர் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த 22ம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் அளிக்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானின் பிரபல நடிகை ஹனியா அமீருக்கு, இந்திய ரசிகர் ஒருவர் தண்ணீர் பாட்டில்களை அனுப்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.
நடிகை ஹனியா அமீருக்கு சிந்து நதி நீர் இனி கிடைக்காது என்பதால் நடிகை ஹனியா மீது வைத்துள்ள அன்பின் காரணமாக இந்த தண்ணீர் பாட்டில்களை அவர் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார். இது குறித்து வெளியான வீடியோவில் பேசும் நபர், “இந்த சிறுவன் இன்று ஒரு பார்சல் கொண்டு வந்துள்ளார். அதில் என்ன இருக்கிறது பாருங்கள். இந்த தண்ணீர் பாட்டில்களை நடிகை ஹனியா அமீருக்கு இந்த சிறுவன் அனுப்பியுள்ளான்" என்று தெரிவிக்கிறார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!