பாகிஸ்தான் கப்பல்களுக்கு இந்திய துறைமுகங்களில் தடை!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் உள்ள துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்கள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அதேபோல இந்திய கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகங்களுக்குச் செல்லக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இந்தியாவின் சொத்துகள், சரக்குகள் மற்றும் துறைமுக உள்கட்டமைப்பைப் பாதுகாக்க வணிகக் கப்பல் சட்டம், 1958-ன் பிரிவு 411-ன் கீழ் உடனடியாக இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.
கடற்படையின் மூலமாக இந்திய வணிகத்தை ஊக்குவிப்பதும், கடற்படையின் பராமரிப்பை உறுதி செய்வதும் இந்தச் சட்டத்தின் நோக்கம்" என அமைச்சகம் கூறியுள்ளது. முன்னதாக, பாகிஸ்தானில் இருந்து அனைத்துப் பொருள்களின் இறக்குமதிக்கும் தடை விதித்துள்ள மத்திய அரசு, இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!