பாகிஸ்தான் தொடர் அத்து மீறல்... எல்லையில் 4வது முறையாக துப்பாக்கிச்சூடு... இந்தியா பதிலடி!

இந்தியாவில் ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் நாடுமுழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து பிரதமா் மோடி சிந்து நதி நீா் பகிா்வு ஒப்பந்தம் நிறுத்தம், வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்களுக்கு விசா (நுழைவு இசைவு) ரத்து, பரஸ்பர தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம் போன்ற முக்கிய முடிவுகளை அறிவித்தார்.
இதனைத் தொடா்ந்து, பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக சில நடவடிக்கைகளை அறிவித்ததால் இருத்தரப்புக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் 4வது முறையாக நள்ளிரவு அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது.
பூஞ்ச் மற்றும் குப்வாரா மாவட்டங்களின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல்களுக்கு இந்தியத் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் இந்த தொடர் அத்துமீறல்கள் இரு நாடுகளிடையே மேலும் பதற்றத்தை அதிகரித்து வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!