பீதியில் பொதுமக்கள்... பாகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

பாகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவலின்படி இன்று அதிகாலை இந்திய நேரப்படி 1.40 மணிக்கு 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் பூமிக்கு அடியில் 27 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.20 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 70.03 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் ஏற்பட்டிருக்கலாம் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக பிப்ரவரி 21ம் தேதி பாகிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!