எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் 3 மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக நியமனம்!
May 18, 2025, 16:30 IST
திமுகவின் 3 மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகவலால் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 2026ல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக ஏற்கனவே திமுகவில் 7 மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 8வது பொறுப்பாளராக தற்போது எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் கிழக்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களுக்கு இவர் பொறுப்பாளராக செயல்படுவார் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
