பாராசெயிலிங் சாகசம்... கயிறு அறுந்து விழுந்து கடலில் விழுந்த சுற்றுலாப் பயணி... பகீர் வீடியோ!
கோவாவின் புகழ்பெற்ற பாகா கடற்கரைக்குச் சுற்றுலா வந்த பயணி ஒருவர், பாராசெயிலிங் எனப்படும் வானில் பறக்கும் சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. வானில் உயரமாகப் பறந்து கொண்டிருந்தபோது, படகுடன் இணைக்கப்பட்டிருந்த பாதுகாப்புக் கயிறு திடீரென அறுந்து போனதால் அந்தப் பயணி கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அவர் நேரடியாகக் கடலுக்குள் விழுந்த சம்பவம், அங்கிருந்த மற்ற சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
Repeat with me - Never Ever do any adventure activity in India.
— Suraj Kumar Talreja (@suritalreja) March 30, 2026
Yesterday while doing parasailing in Goa, a cable got snapped. pic.twitter.com/ZYAY3zWo04
கடலில் விழுந்த அந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் காக்கும் கவசம் அணிந்திருந்ததாலும், பாராசூட் மெதுவாக இறங்கியதாலும் பெரும் உயிர்ச் சேதமின்றி தப்பினார். விபத்து நடந்த உடனே படகில் இருந்த ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, கடலில் தத்தளித்த அவரைப் பத்திரமாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். அவருக்குக் கடுமையான காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளித்தாலும், சாகச விளையாட்டுகளில் நிலவும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்துப் சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தற்போது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து கோவா மாநில சுற்றுலாத்துறை தற்போது தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், உபகரண பராமரிப்பில் அலட்சியம் காட்டியது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளது. சாகச விளையாட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் கயிறுகள் மற்றும் இதர கருவிகள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சிக்காகச் சாகசங்களில் ஈடுபடும்போது, நிறுவனங்கள் பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
