மாணவர்களின் பைகளில் கத்தி, ஒரு சைக்கிள் செயின், ஆணுறைகள்... பெற்றோர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி!

 
மாணவர்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில்  நாசிக்கில் இகத்புரி தாலுகாவின் கோட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாணவர்களின் பைகளில் இருந்து கத்திகள், விளையாட்டு அட்டைகள் மற்றும் சைக்கிள் சங்கிலிகள் உட்பட  ஆபத்தான பொருட்களை ஆசிரியர்கள் கண்டுபிடித்தனர் என பத்திரிகையாளர் ராஜ் மாஜி குறிப்பிட்டுள்ளார். 

கத்தி

நாசிக்கில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களின் பைகளில் திடீரென நடத்தப்பட்ட  ஆய்வில், மாணவர் தங்களின் பைகளில் கத்திகள், ஆணுறைகள், விளையாட்டு அட்டைகள் மற்றும் சைக்கிள் செயின்களை வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாசிக்கின் கோட்டியில்  ஒரு தனியார் பள்ளியில் நடந்ததாகக் கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

சைக்கிள் செயின்

இதனைத் தொடர்ந்து மாணவர்களின் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுகின்றன. சில மாணவர்கள் அசாதாரண ஹேர் ஸ்டைலுக்காக ஒழுங்குபடுத்தப்பட்டனர். இதை அடுத்து, ஆசிரியர்களால் இந்த திடீர் சோதனைகத்தி, ஒரு சைக்கிள் செயின், ஆணுறைகள்  மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.  இது குறித்து  பத்திரிகையாளர் ராஜ் மாஜி வெளியிட்ட வீடியோவில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஒரு மேஜையில் வைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. மாணவர்களின் பையில் இருந்து பெறப்பட்ட பொருட்களில் பித்தளை நக்கிள்ஸ், ஒரு மற்றும் போகிமொன் அட்டைகள் இருந்தன.   ஆய்வில் யாரும் எதிர்பார்க்காத வகையில், இதுபோன்ற பொருட்கள் கிடைத்தது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web