பெற்றோர்களே உஷார்!! மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி பலி!!

 
சிறுமி


6 மாத கைக்குழந்தையில் இருந்தே  கையில் எந்த நேரமும் மொபைல் போன்கள் தான்.  அதிலும் கொரோனா ஊரடங்கு காலகட்டத்திற்கு பிறகு மொபைலையும், அவர்களையும் பிரிக்க முடிவதே இல்லை. தெருக்களில் ஓடியாடி விளையாடும் சத்தம் கேட்பதே இல்லை. என் புள்ள போன் குடுத்தா போதும் சமத்தா சாப்பிட்டுட்டு ஒரே இடத்தில இருப்பான் என்பது பெரும்பாலான அம்மாக்கள் சிலாகித்து பெருமையாக சொல்பவை. ஆனால் இதனால் குழந்தைகளுக்கான உடல் உழைப்பு தொலைந்து போய் ஆரோக்கியம் சீர்கெட்டு வருவதை உணர்வதே இல்லை.

ஆதித்ய ஸ்ரீ

இன்னும் சில நேரங்களில் விபரீதங்களும் நிகழ்ந்து விடுகின்றன.கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்டம் பட்டிப்பறம்பு  இடத்தில் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் அசோக் குமாரின்  மகள் ஆதித்யா ஶ்ரீ  என்னும் 8 வயது சிறுமி நேற்று இரவு 10.30 மணி அளவில் மொபைல் ஃபோனில் வீடியோ பார்த்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக திடீரென செல்போன் வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில், சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கருகிய மொபைல்

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து  மொபைல் வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 8 வயதாகும் இந்த சிறுமி அருகில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். இவரது அம்மா கூட்டுறவு வங்கியின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.  குழந்தைகளிடம் அதிக நேரம் மொபைல் போனை கொடுக்க வேண்டாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web