பெற்றோர்களே உஷார்... 9ம் வகுப்பு மாணவி டெங்குவால் பரிதாப பலி!
தமிழகத்தில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே முடினாம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவர், விவசாய கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு 2 மகள்கள். மூத்த மகள் 13 வயது ஷிவானி. இவர் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இளைய மகள் 11 வயது நிரஞ்சனா . இவரும் அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி ஷிவானி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மார்ச் 7ம் தேதி, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பயனின்றி சிறுநீரகம், கணையம், நுரையீரல் உடல் உறுப்புகள் செயலிழந்தன. இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழ்ந்தார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
