பெற்றோர்களே உஷார்... மணமேடையிலேயே மாரடைப்பால் மணப்பெண் மரணம்!

 
ஹேத்தல்

நான் எல்லாம் தினந்தோறும் உடற்பயிற்சி செய்கிறேன்.. எனக்கெல்லாம் மாரடைப்பு வராது என்று இருக்காதீங்க... உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதே கூட மாரடைப்பால் மரணமடைகிறார்கள். வயசு 26 கூட ஆகலை... பரிதாபம்... மாரடைப்பால் இளைஞர்களின் மரணம் அதிகரித்து வருகிறது.

எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது.. ஆனாலும் மாரடைப்பு வருகிறது. அதிகளவிலான மன அழுத்தம் மாரடைப்புக்கு  முக்கிய காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். சாஃப்ட்வேர் கலாசாரம்...மேற்கத்திய உணவு பரவல், சிதைந்து போன கூட்டுக் குடும்பங்கள், தனிமை இது எல்லாம் கூட மாரடைப்புக்கு காரணங்களாக இருக்கின்றன.  எனவே ரெகுலர் செக்கப் செய்துக்கோங்க. உங்க உடம்பை இளமையா வெச்சிருந்தா மட்டும் போதாது... உங்க மனசையும் இளமையா வெச்சிருங்க.

இதோ.. ஊர் எல்லாம் பத்திரிக்கைக் கொடுத்து, சொந்த பந்தங்கள் எல்லாம் ஆசிர்வதிக்க திரண்டு வந்து இருந்த போது, மணமேடையிலேயே சுருண்டு விழுந்து, மாரடைப்பால் இளம்பெண் பலியாகியுள்ளார். சொந்த பந்தங்கள் காத்திருக்க.. மகளின் இழப்பு ஒரு பக்கம், நம்பி திருமணம் செய்ய காத்திருக்கும் மாப்பிள்ளையின் எதிர்காலம் இன்னொரு புறம் என பெற்றோர்.. கண நேரத்தில் எடுத்த நெகிழ்ச்சியான முடிவு... மணப்பெண்ணின் தங்கையை திருமணத்துக்கு தயார் படுத்தினார்கள். அதன் பின்னர், மூத்த மகளின் இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். 

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள சுபாஷ்நகர் பகுதியைச் சேர்ந்த ஹேத்தல் - விஷால் ஆகியோருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது, இந்த மணமக்களுக்கு திருமணத்துக்கு முந்தைய நாளில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மணமகளும், மணமகனும் அலங்கரிக்கப்பட்டு மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.

ஹேத்தல்

அப்போது, யாரும் எதிர்பாராதவகையில் மணப்பெண் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மணப்பெண் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனால் இருவீட்டாரும் பெரும் அதிர்ச்சி அடைந்து சோகத்தில் மூழ்கினர். மணப்பெண்ணின் பெற்றோர் கதறிஅழுதனர். அங்கிருந்த உறவினர்கள் இருவரையும் தேற்றினர். பின்னர், திருமணத்தை நிறுத்தவேண்டாம் என அங்கிருந்த உறவினர்கள் கூறினர். அவர்கள் ஆலோசனைபடி, ஹேத்தலின் தங்கையை விஷாலுக்கு மணமுடிக்க முடிவு செய்யப்பட்டு திருமணம் நடந்தது.

ஹேத்தல்

மகளின் திடீர் மறைவால் சோகத்தில் இருந்து மணப்பெண்ணின் குடும்பத்தினர், மற்றொரு மகளின் திருமண நிகழ்ச்சியில் உற்சாகத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தனர். இதனால் திருமணம் எளியை முறையில் நடைபெற்றது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web