பெற்றோர்களே உஷார்... இன்றுடன் நிறைவு... தமிழகம் முழுவதும் 11,000 இடங்களில் குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசி முகாம்!
இன்று டிசம்பர் 31ம் தேதியுடன் தமிழகம் முழுவதும் 11,000 இடங்களில் நடைபெற்று வரும் குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசி முகாம் நிறைவு பெறுகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களில் மறந்துடாதீங்க. உங்கள் குழந்தைகளுக்கு உடனே அருகில் உள்ள தடுப்பூசி முகாமில் வயதுக்கேற்ப எந்தெந்த தடுப்பூசி என்று அட்டவணையை சரிபார்த்து, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க.
தேசிய தடுப்பூசி அட்டவணையின் படி மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம் பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்'ஃ'ப்ளூயன்ஸா தொற்று, நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், விட்டமின் - ஏ குறைபாடு பாதிப்புகளுக்காக தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் இந்தத் திட்டத்தின் கீழ் 9.40 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 11,000 இடங்களில் அந்த தடுப்பூசிகள் அளிக்கப்படுகின்றன.
முதல் தவணைக்கு பிறகு அடுத்த தவணையை சில குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் பெற்றோா் செலுத்துவதில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக 100 சதவீத தடுப்பூசி இலக்கை அடையவும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையிலும் இதனைக் கண்காணிக்க சிறப்பு நடவடிக்கையை பொது சுகாதாரத் துறை முன்னெடுத்துள்ளது. அதன்படி, அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்யும் வகையில், சிறப்பு தடுப்பூசி முகாமை பொது சுகாதாரத் துறை நடத்தி வருகிறது.
அதில் நிமோனியா மூளைக் காய்ச்சல், தொண்டை வீக்கம் உட்பட 5 வகையான நோய்களில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க பெண்டாவேலன்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
குழந்தை பிறந்து 4, 10, 14வது வாரங்களில் பெண்டாலேன்ட் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. உரிய தவணையில் தடுப்பூசி செலுத்தத் தவறியவா்களுக்காக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இன்று டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படும். இதில், பெண்டாலேன்ட் தடுப்பூசி மட்டுமன்றி, ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தில் விடுபட்ட மற்ற தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ளலாம். அதனால மறக்காம இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!