செல்போன் திருடன் என சந்தேகம்… 12 வயது மகனை சங்கிலியால் கட்டிய பெற்றோர்!

 
சிறுவன்

தினக்கூலி வேலைக்கு செல்லும் பெற்றோர், தங்களின் 12 வயது மகனை செல்போன் திருடன் என குற்றம் சாட்டி, கடந்த இரண்டு மாதங்களாக தினமும் பல மணி நேரம் சங்கிலியால் கட்டி வைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரம் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்துள்ளது. தகவல் கிடைத்ததும் காவல்துறை மற்றும் பெண்கள்-குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் சிறுவனை மீட்டு அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.

மீட்பு குழு சென்றபோது, அந்தச் சிறுவன் ஒரு வாளியின் மீது நின்ற நிலையில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தான். பெற்றோர் தினமும் காலை 9 மணிக்கு வேலைக்கு செல்லும் முன் அவனை கட்டி வைப்பதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவனின் உடலில் 2 முதல் 3 மாதங்கள் பழமையான காயங்கள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுவன்

சிறுவனுக்கு நடத்தை சார்ந்த பிரச்சினைகள் இருப்பதாகவும், குறிப்பாக திருட்டுப் பழக்கம் காரணமாக பெற்றோர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், குழந்தையை இவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் கட்டி வைத்தது பெரும் கண்டனத்தை எழுப்பியுள்ளது. இந்தச் சம்பவம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் முன்வைத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!