பீதியில் பெற்றோர்கள்... தெருநாய்கள் கடித்து 6 சிறுவர்கள் படுகாயம்!
தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆம்பூரில் தெருநாய்கள் கடித்ததில் 6 சிறுவர்கள் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

ஆம்பூர் புதுமனை, பிலால்நகர், தார்வழி ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாய்களைப் பிடிக்க பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
