சிபிஎஸ்இ “NO ALL PASS"க்கு பெற்றோர்கள் எதிர்த்து கேள்வி கேளுங்க... அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேசம்!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், CBSE-ல் 3,5,8ம் மாணவர்களை குறைந்த மதிப்பெண் பெற்றால் பெயில் என்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "CBSE-'நோ ஆல் பாஸ்' தொடர்பாக கையெழுத்து கேட்டால் பெற்றோர் எதிர்த்து கேளுங்கள். தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம். தேசிய கல்விக் கொள்கையை CBSE செயல்படுத்தும் போது பெற்றோர்கள் தங்களது எதிர்ப்புக்களை பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
5 ம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்கினால் இடைதிற்றல் அதிகரிக்கும். 5,8ம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்குவது பெற்றோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். மாணவர்கள் கல்வி கற்பதை விட்டே செல்லும் நிலை உருவாகும். CBSE-ல் "நோ ஆல் பாஸ்" குறித்து கையெழுத்து கேட்டால் பெற்றோர்கள் எதிர்த்து கேள்வி எழுப்புங்கள் என கூறினார்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!