பாராளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு!

இந்தியாவில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 வது அமர்வு மார்ச் 10ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த அமர்வின் போது 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும். அவையின் வேலை நேரம் 118 சதவீதக்க்கும் அதிகமாக இருந்ததாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார். இது குறித்து மேலும் வக்பு திருத்த மசோதா விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது என்ற சோனியா காந்தியின் கூற்று துரதிர்ஷ்டவசமானது.இந்த பேச்சு அவையின் கண்ணியத்திற்கு எதிரானது எனக் கூறியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து மக்களவையை தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர். தொடர்ந்து மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 27 சதவீதம் பரஸ்பர வரி விதித்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!