பகீர்!! நடுவானில் விமான அதிகாரியை அறைந்த பயணி!!
விமானப் பயணங்களில் சமீபகாலமாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. சக பயணியின் மீது சிறுநீர் கழித்தல், விமானப் பணிப்பெண்ணுடன் வாக்குவாதம், பறந்து கொண்டிருக்கும் போதே ஜன்னலை திறக்கும் விவகாரம், பயணிகளை விட்டு லக்கேஜ்களை மட்டும் ஏற்றி சென்ற விமானம் என பலவகையான பிரச்சனைகள் நடப்பது வாடிக்கையாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஏர் இந்தியா விமான அதிகாரியை பயணி ஒருவர் அறைந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி - டெல்லி விமானத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரியை சக பயணியின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
விமானத்தில் இருக்கையை மாற்றிக்கொள்வதில் ஏற்பட்ட தகராறில் விமானத்தில் பயணம் செய்த ஏர் இந்தியா அதிகாரியை பயணி ஒருவர் கன்னத்தில் அறைந்துள்ளார். விமானம் டெல்லியில் தரையிறங்கிய பிறகு அதிகாரியை தாக்கிய பயணி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நடுவானில் ஏர் இந்தியா அதிகாரியை பயணி அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜூலை 9, 2023 ல் சிட்னி-டெல்லியில் இயக்கப்படும் ஏ1-301 விமானத்தில் பயணி ஒருவர் இருக்கையை மாற்றி தருவதில் வாக்குவாதம் செய்தார். அவருக்கு விளக்க முற்பட்ட ஏர் இந்தியா விமான அதிகாரியை கன்னத்தில் அறைந்துள்லார். இதனால் சக பயணிகளுக்கு பெரும் தொந்தரவாக இருந்தது." எனத் தெரிவித்துள்ளது. "விமானம் டெல்லியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட உடனே சர்ச்சைக்குரிய பயணி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அதன் பிறகு தவறை உணர்ந்து அவர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார்" என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!