ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 5வது மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 5வது மாடியில் இருந்து கீழே குதித்து நோயாளி ஒருவர் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம் அலமாதி, நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (48). இவருடைய மனைவி பானுமதி (45). சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக வேலை செய்து வந்த குமார், தனது வலது கழுத்து பகுதியில் உள்ள கட்டியால் மிகுந்த அவதியடைந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 14ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இதற்காக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் டவர் ஒன்று, 5வது மாடியில் உள்ள காது, மூக்கு, தொண்டை வார்டில் அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பெற்று வந்த வார்டின் ஜன்னல் அருகே சென்ற குமார், திடீரென அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவன் தலைமையிலான போலீசார், குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குமார் தனது கழுத்தில் உள்ள கட்டியால் மிகுந்த வலியை அனுபவித்து வந்ததும், இதனால் மனவேதனை அடைந்த அவர் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!