பொதுமக்கள் அவதி!! நாளை முழு அடைப்பு போராட்டம்!! பேருந்துகள் பணிமனைக்கு திரும்ப உத்தரவு!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் நிலக்கரி சுரங்க பணிகளுக்காக விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது இதனை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் கடலூர் மாவட்டம் முழுவதும் நாளை மார்ச் 11 ம் தேதி சனிக்கிழமை என்.எல்.சிக்கு எதிராக முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வணிக நிறுவனங்கள் மற்றும் பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணியில் முதற்கட்டமாக 2006ல் பெறப்பட்ட நிலத்தை சமன்படுத்தும் பணிகளை தற்போது என்.எல்.சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடாமல் தடுக்க பாதுகாப்பிற்காக அப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.அந்த வகையில் நிலம் கையப்படுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மார்ச் 11ம் தேதி சனிக்கிழமை கடலூரில் பாமக முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த போராட்டத்திற்கு அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த முழு அடைப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மாவட்ட நிர்வாகம் முழு அடைப்பு போராட்டம் குறித்து பாமகவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. உரிய பாதுகாப்புடன் வணிக நிறுவனங்கள், பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என அறிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க