மக்களே உஷார்!! தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!!
2019டிசம்பரில் சீனாவில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். உலகம் முழுவதையும் 2 ஆண்டுகள் வீட்டிற்குள்ளேயே முடக்கி போட்டது. தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கி மக்கள் மனதில் பெரும் புயலைக் கிளப்பி வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 334 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதே போல் தமிழகத்திலும் மெல்ல மெல்ல பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
பிப்ரவரி மாத தொடக்கத்தில் 34 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது 480 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 83 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே நேரத்தில் கொரோனா தொற்று உறுதியாகும் விகிதமும் அதிகரித்து வருகிறது. பதிவாகும் எண்ணிக்கைகளை விட உண்மையான பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏனெனில் பலர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்வது, சுய மருத்துவம் செய்து கொள்வது, யாரிடமும் சொல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்வது என தமிழகத்தில் பலர் இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். அதிலும் தற்போது பரவி வரும் கொரோனா வகை ஒமைக்ரான் வகையின் உட்பிரிவே. இதனால் பெரிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். இருப்பினும், முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளை கழுவுதல் என தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க