பொதுமக்களே உஷார்... ஆற்றில் இறங்கவும், குளிக்கவும் தடை... 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மே 16 முதல் 19 வரை கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக, ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் மற்றும் வளிமண்டல மாற்றங்கள் காரணமாக இப்பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், மொத்தம் 3 மாவட்டங்களுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணையில் உபரி நீர் வெளியேற்றப்படுவதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர் மழை காரணமாக இப்பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கனமழை பதிவாகி இருப்பதாகவும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக மே 16 முதல் 19 வரை மழை தொடர்ந்து பெய்து வருவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் தாழ்வான பகுதிகளைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களுக்கு மாற வேண்டும் . ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
