பொதுமக்களே உஷார்... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ... ஓடும் பேருந்தில் குழுவாக மொபைல் திருட்டில் ஈடுபடும் திருடர்கள்!
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில், திருடர்களின் செயல்பாடுகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. டிடிசி பேருந்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவில், ஒரு திருடர்கள் கும்பல் திட்டமிட்ட முறையில் ஒரு நபரின் மொபைலை திருடுகிறது. அந்த நபருக்கே தன்னுடைய மொபைல் போன் திருடப்படுவதைப் பற்றிய எந்த பிரக்ஞையும் ஏற்படவில்லை என்பது தான் உச்சகட்ட அதிர்ச்சி.
இந்த வீடியோவில், ஒரே பேருந்தில் குழுவாக பயணிக்கும் பிக்பாக்கெட் கும்பல், தங்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவியுடன் செயலில் இறங்குகின்றனர். அவர்கள் முதலில் அந்த நபருக்கு இடையில் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர். ஒருவர் அவரை தள்ளும்போது, மற்றொருவர் ரகசியமாக அவரது மொபைலை எடுத்து விடுகிறார்.
अगर ऐसी स्ट्रेटजी से मोबाइल चुरायेंगे तो भाईसाहब कौन पकड़ पायेगा, पॉकेटमार नेक्स्ट लेवल टीम वर्क कर रहे है 😭😭 pic.twitter.com/TaYjxNzGKm
— Raja Babu (@GaurangBhardwa1) May 16, 2025
இந்த செயல் மிகச் சரியாக திட்டமிட்ட படி, வேகமாக நடப்பதால், அருகில் இருந்த பயணிகளுக்கும், பேருந்து ஓட்டுநருக்கும் சந்தேகமே ஏற்படவில்லை. இந்த வீடியோவைக் கண்ட மக்கள், “பேருந்து பயணங்களில் எச்சரிக்கையாக இருங்க” என பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, தற்போது 5 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. பொது இடங்களில் குற்றச்செயல்களில் குழுவாக செயல்படும் திருடர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அத்துடன் பொதுமக்கள் அனைவரும் பேருந்து, ரயில் உட்பட பொதுப் போக்குவரத்தில் மிகுந்த கவனத்துடன் பயணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
