தலைநகரில் பரபரப்பு... வக்ஃபு மசோதாவிற்கு எதிரான தவெக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு...!

 
தவெக


 
 தவெக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விஜய் அறிவித்திருந்தார்.
இது குறித்து ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிக்கையில்  ஆட்சி அதிகாரம் இருந்தால், எந்தவொரு சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான சட்டத்தையும் நிறைவேற்றிவிடலாம் என்ற மனநிலை கொண்ட ஆட்சியாளர்களுக்கு நேர்ந்த கதி வரலாற்றில் இருந்து வருவதாகவும்  இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை கையில் எடுத்துள்ளதாகவும்  பாஜக அரசை  கண்டித்துள்ளார்.

வக்ஃப்


இந்நிலையில், இன்று சென்னை பட்டினப்பாக்கம் பேருந்து பணிமனை முன்பு போராட்டம் நடத்த வந்த தவெகவினர் தடுக்கப்பட்டு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  பட்டினப்பாக்கம் பேருந்து பணிமனை எதிரே போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் அனுமதி  அளிக்கப்படவில்லை என்றும், போராட்டம் நடத்த மாற்று இடம் தருவதாகக் கூறியும் தவெகவினர் ஏற்க மறுத்து விட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.  இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

வக்பு


வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் மூலம், மதம் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான விவகாரங்களிலும் தவெக தலையிட முனைகிறது. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ஒவ்வொரு முறையும் மக்களின் உரிமைக்காக ஆர்ப்பாட்டம் நடத்த முயலும் தவெகவிற்கு  தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web