அடுத்த அதிர்ச்சி... பாமக நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பாமக மாவட்ட செயலாளர் வண்ணை சத்யா. இவரது மகன் நிஷால் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே 3 வாகனத்தில் வந்த 5க்கும் மேற்பட்டோர் அவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சமயத்தில் நிஷால் தாக்குதல் நடைபெற்ற போது தனது வாகனத்தை அதே இடத்தில் போட்டுவிட்டு தப்பி ஓடத் தொடங்கினார்.
இது குறித்து அவருடைய தந்தை வண்ணை சத்யா தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதே சமயத்தில் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் அதே பகுதியில் வசித்து வரும் இளைஞர்களுக்கும் வண்ணை சத்யா மகனுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறுக்கு பகை தீர்த்துக் கொள்ளும் வகையில் நிஷாலை கொலை செய்ய முயற்சி செய்ததோடு, வண்ணை சத்யா வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொலை வெறி தாக்குதல் நடத்திய மர்ம கும்பலை தேடி காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக பிரமுகர் இரு நாட்களுக்கு முன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. அதற்குள் சென்னையில் பாமக நிர்வாகியின் மகனை கொலை முயற்சி சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!