இப்பவே திட்டமிட்டுக்கோங்க... மார்ச் 29 முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை!
விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான் . பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மட்டுமல்ல. அலுவலகங்களில் பணிபுரிபவர்களும் விடுமுறை நாள் என்றால் கொஞ்சம் ரிலாக்சாக வேலை செய்யலாம் என்ற வகையில் விடுமுறை நாளை முன்கூட்டியே திட்டமிட்டு விடுகின்றனர்.

அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இந்த வாரம் தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை வருகிறது. அதன்படி மார்ச் 29ம் தேதி சனிக்கிழமை, மார்ச் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 31 ம் தேதி திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை என மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை வருகிறது.

இதைத்தொடர்ந்து ஏப்ரல் 1ம் தேதி வங்கி கணக்கு முடிவுக்காக வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை. மேலும் அடுத்த வாரம் 4நாட்களுக்கு தொடர் விடுமுறை வருவது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
