சீட்டு விளையாட்டில் விபரீதம்... பிரபல ரவுடி படுகொலை!

சீட்டு விளையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் பிரபல ரவுடி படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை நீலந்தாங்கல், பெரிய ஏரி பகுதியில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அந்த பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்த விசாரணையில், கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டவர் ஐயப்பன்(42) என்பது தெரிய வந்தது.புதுச்சேரி மாநிலத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை மேற்கொண்டு வந்தார். இவரின் மீது 5 க்கும் மேற்பட்ட வழக்குகள் புதுச்சேரியில் நிலுவையில் இருந்து வருகின்றன.
இந்நிலையில் தனது நண்பர்களுடன் சீட்டு விளையாடி கொண்டு இருந்த ஐயப்பன், வட்டிக்கு கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஐயப்பனை கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து, குற்றவாளிகளை அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!