ப்ளீஸ் காப்பாத்துங்க... 6 ஆண்டுகளாக பாஸ்போர்ட் கிடைக்காமல் சவுதியில் சிக்கி தவிக்கும் இளைஞர், பசி, பிணி, வறுமையில் போராடும் குடும்பம்!

பின்னர் ரூ. 75 லட்சம் இழப்பீடு தொகையை செலுத்தினால்தான் விடுதலை வழங்கப்படும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவரது பணியாளர் நிறுவனம் ரூ. 35 லட்சம் செலுத்தியது. அதன் பின் 2020ம் ஆண்டு தேதி ஷாஜூவுக்கு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். ஆனால் மீதமுள்ள ரூ. 35 லட்சம் செலுத்தப்படாததால் சவுதியில் சிக்கித் தவித்து வருகிறார்.
அதோடு இன்று வரை சம்பளம் இல்லாமல், பாஸ்போர்ட் கிடைக்காமல், சுதந்திரமில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வரும் நிலையில் பினியும் அவரது மகள்களும் உணவு, அடைக்கலம், கல்வி என எந்தவித ஆதாரமும் இல்லாமல் கண்ணீருடன் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். . இந்நிலையில் ஷாஜுவை மீண்டும் இந்தியாவில் சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்காக ஊர் பொதுமக்கள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி அவரது பெயரில் நன்கொடை கணக்கு தொடங்கப்பட்டு கேரளா கிராமீன் வங்கி குன்னமங்கலம் கிளையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் பலரும் நன்கொடை அளிக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!