11ம் வகுப்பு மாணவியை கருவேலங் காட்டுக்குள் கடத்திச் சென்று பலாத்காரம்.. வெளிநாட்டில் இருந்து வந்தவர் கொடூரம்!

 
சிறுமி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பெண்னாடத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். மாணவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுமி இரவு 8 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். தெருவில் நின்று விளையாடிய அவரை திடீரென காணவில்லை. கூடலூர் கிராமத்தை சேர்ந்த செல்வம் (50) என்பவர் மாணவியை வலுக்கட்டாயமாக அக்கிராமத்தின் அருகேயுள்ள காட்டுக்கு அழைத்துச் சென்றார். 

சிறுமி

அங்கு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து மாணவியை செல்வம் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதன் பின்னர் மாணவி, அழுதுக் கொண்டே தனது வீட்டுக்கு சென்றுள்ளார். இதனை பார்த்த பெற்றோர், மாணவியிடம் விசாரித்த போது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறியுள்ளார்.

இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆவினங்குடி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செல்வம், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு திரும்பினார்.

சிறுமி

இந்த நிலையில், அவர் இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது திட்டக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூரத்தில் ஈடுபட்டு சிறை சென்றதால் இனி வெளிநாடு செல்ல முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web