ஆன்மீக துணிச்சலின் கலங்கரை விளக்கம் போப் பிரான்சிஸ்... பிரதமர் மோடி இரங்கல்!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைபாடு காரணமாக காலமானார் . இவருக்கு வயது 88. போப் பிரான்சிஸ் கடந்த சில மாதங்களாக நிமோனியா உடல்நலக்குறைவு காரணமாகத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதே சமயம் வயது முதிர்வு காரணமாக அவருக்கு சிகிச்சை அளிப்பது மருத்துவத்துறை நிபுணர்களுக்கு சவாலாக இருந்தது. இந்நிலையில் போப் பிரான்சிஸ் காலமானார் என்ற சோகமான செய்தி வெளியாகியுள்ளது.

உடல் நலக்குறைவு காரணமாக போப் பிரான்சிஸ் வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இன்று காலை 07.35 மணிக்கு போப் பிரான்சிஸ் காலமானதாக வாடிகன் சிட்டி தகவல் தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸ் மறைவு சர்வதேச அளவில் பலரிடமும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு உலகம் முழுவதிலும் இருந்தும் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “புனித திருத்தந்தை பிரான்சிஸ் மறைவால் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த துயரம் மிக்க பிரான்சிஸ் நினைவு நாளில், உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் இரக்கம், பணிவு மற்றும் ஆன்மீக துணிச்சலின் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார். சிறு வயதிலிருந்தே, அவர் கர்த்தராகிய கிறிஸ்துவின் கொள்கைகளை உணர்ந்து கொள்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

அவர் ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடாமுயற்சியுடன் சேவை செய்தார். துன்பத்தில் இருந்தவர்களுக்கு, அவர் நம்பிக்கையின் உணர்வைத் தூண்டினார். அவருடனான எனது சந்திப்புகளை நான் அன்புடன் நினைவு கூர்கிறேன். மேலும் உள்ளடக்கிய மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இந்திய மக்கள் மீதான அவரது பாசம் எப்போதும் போற்றப்படும். அவரது ஆன்மா கடவுளின் அரவணைப்பில் நித்திய சாந்தியைக் காணட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
