வைரல் வீடியோ... பவன் கல்யாணுக்கு இருமல் மிட்டாய் கொடுத்த பிரதமர் மோடி!

ஆந்திர மாநிலத்தில் அமராவதியை புதிய தலைநகராக உருவாக்குவது உட்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைநகரில் அமைய உள்ள உள்கட்டமைப்புகள், தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், பாதுகாப்புத் துறை சார்ந்த உள்கட்டமைப்புகள் உட்பட 94 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
अपने भाषण के दौरान माननीय उपमुख्यमंत्री श्री @PawanKalyan को बीच में ही खाँसी ने व्यथित कर दिया। दयालुता और चिंता के भाव से माननीय प्रधानमंत्री श्री @narendramodi जी ने तुरंत श्री पवन कल्याण को खांसी कम करने की कैंडी दी और उन्हें सलाह दी कि "इसे खाओ और पानी पियो।" प्रधानमंत्री की… pic.twitter.com/J0ju4mGrMN
— JanaSena Shatagni (@JSPShatagniTeam) May 2, 2025
இந்நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது துணை முதல்வர் பவண் கல்யாணுக்கு திடீரென இருமல் ஏற்பட்டது.
இதனையடுத்து சிறிது நேரனால் அவரது உரையில் சிறிது இடையூறு ஏற்பட்டது. இதைக் கவனித்த பிரதமர் மோடி, உடனடியாக தனது வசம் இருந்த இருமல் மிட்டாய் ஒன்றை பவன் கல்யாணிடம் வழங்கினார்.
இதனைச்சாப்பிட்டு தண்ணீர் குடிக்கவும் என பவன் கல்யாணுக்கு பிரதமர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. பிரதமரின் இந்த செயல் அங்கிருந்தவர்கள் மத்தியில் கவனம் பெற்றது. தற்போது இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!