முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை!

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை நடத்தினாா்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்து ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் நடத்திவரும் தாக்குதலை முறியடித்து இந்தியா பதில் தாக்குதல் நடத்திவரும் நிலையில் பிரதமா் மோடி தலைமையில் உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், முப்படைத் தளபதி அனில் செளஹான், ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர திவிவேதி, விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங், கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் திரிபாதி ஆகியோா் பங்கேற்றனா்.
முப்படைகளின் முன்னாள் தளபதிகள், முன்னாள் ராணுவ வீரா்களுடனும் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை விரிவான ஆலோசனை நடத்தினாா். பாகிஸ்தானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் சூழலில் நாட்டை வழிநடத்த தற்போது முன்னாள் வீரா்களின் வழிநடத்தல் தேவை என ஆலோசனையின்போது பிரதமா் மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகின.
முன்னதாக, நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் உயா்நிலை ஆய்வுக் கூட்டம் தில்லியில் நேற்று நடைபெற்றது.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘உயா்நிலைக் கூட்டத்தில் முப்படைத் தளபதி அனில் செளஹான், ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர திவிவேதி, விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங், கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் திரிபாதி மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலா் ராஜேஷ் குமாா் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பாகிஸ்தானுடன் போா்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் ராணுவத்தின் தயாா்நிலை மற்றும் நாட்டின் மேற்கு எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பு நிலவரம் குறித்து கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சா் ஆய்வு மேற்கொண்டாா்’ என்றாா்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!