மெய்யான சமூக நீதியின் காவலர் பிரதமர் மோடி... நயினார் நாகேந்திரன் புகழாரம் !

 
பிரதமர் மோடி, நயினார் நாகேந்திரன்

இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு  மத்திய அரசு  ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தற்போது அரசியல் கட்சிகள் பலரும் வரவேற்று வரும் நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் பெரிதாக வரவேற்றுள்ளார். இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்  “ மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பும் சேர்த்து எடுக்கப்படும் என்ற நமது மத்திய அமைச்சரவைக் குழுவின் அறிவிப்பை மனதார வரவேற்கிறேன். 

பிரதமர் மோடி, நயினார் நாகேந்திரன்

சாதிவாரி கணக்கெடுப்பை மையமாக வைத்து நாட்டில் குழப்பத்தை உண்டு செய்ய நினைத்தவர்களின் அரசியல் சதியை உடைத்தெறிந்த நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்களுக்கும், மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் மோடி, நயினார் நாகேந்திரன்

பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மற்றும் பழங்குடியின சமூக மக்களின் உரிமைகளை வெறும் அரசியலுக்காக மட்டுமே அரசியல்கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன. அப்படியான கட்சிகளுக்கு மத்தியில், பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்கள் மட்டும் தான் மெய்யான சமூகநீதியின் காவலராக விளங்குகிறார் என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

From around the web