பிரதமர் மோடி, ராகுல்காந்தி குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் வயது மூப்பு காரணமாஅ காலமானார். அவருக்கு வயது 93. வயது மூப்பு பிரச்சினையால் மருத்துவமனையில் குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் குமரி அனந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரதமர் மோடி தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கு பெரும் முயற்சிகளை எடுத்தவர் குமரி அனந்தன்; சமூகத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் தொண்டுக்காகவும் எப்போதும் நினைவுகூரப்படுவார் குமரி அனந்தன் மறைவை அறிந்து வேதனையுற்றேன்; அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், தமிழ் மொழிக்காகவும், மக்களுக்காகவும், கலாசாரத்துக்காகவும் போராடிய காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவை அறிந்து வேதனையடைந்தேன் குமரி அனந்தனின் தொடர் முயற்சியே, நாடாளுமன்றத்தில் தமிழ் குரல்களை ஒலிக்க வைத்தது. காமராஜரின் பெருமைமிக்க சீடராக வாழ்ந்தவர் குமரி அனந்தன் என பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!