மார்ச் 12ம் தேதி மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மார்ச் 12ம் தேதி மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி கலந்து கொள்வதாக அந்நாட்டு பிரதமா் நவீன் ராம்கூலம் அறிவித்துள்ளார். பிரிட்டிஷிடம் இருந்து மோரீஷஸ் 1968, மாா்ச் 12ஆம் தேதி சுதந்திரம் பெற்ற நாளை ஒவ்வோா் ஆண்டும் மோரீஷஸ் தேசிய தினமாக கொண்டாடி வருகிறது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பிரதமா் மோடிக்கு மோரீஷஸ் பிரதமா் நவீன் ராம்கூலம் அழைப்பு விடுத்திருந்தாா். இந்த அழைப்பை பிரதமா் மோடி ஏற்றுக் கொண்டதாக கூறினார்.இதுகுறித்து மோரீஷஸ் நாடாளுமன்றத்தில் பேசிய நவீன் ராம்கூலம், ' 57வது தேசிய தினத்தில் இந்திய பிரதமா் மோடி பங்கேற்க சம்மதித்தது, இருதரப்பு உறவுகள் வலுவான நிலையில் உள்ளதை வெளிப்படுத்துகிறது.
சமீபத்தில் பிரான்ஸ், அமெரிக்கா என தொடா் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டபோதிலும் அவா் மோரீஷஸ் வர ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி' என பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு மோரீஷஸ் தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக இந்திய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பங்கேற்றாா்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!