சென்னை முழுவதும் 257 இடங்களில் 'ரூட் தல' மோதலை தடுக்க போலீசார் குவிப்பு!

சென்னையில் அண்ணா நகர் பகுதி முழுவதும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை புறநகர் ரயில்கள் மற்றும் அரசு பேருந்துகளில் பயணிக்கும் கல்லூரி மாணவர்களிடையே 'ரூட் தல' விவகாரம் காரணமாக அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன.
தற்போது தான் கல்லுாரிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்களிடையே மோதல் போக்கை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முக்கிய வழித்தடங்கள், ரயில் நிலையங்கள் என பல்வேறு இடங்களில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி 'ரூட் தல' மோதலை தடுக்க சென்னையில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உட்பட மொத்தம் 257 இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக அண்ணா நகர் பகுதி முழுவதும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதே போல் கீழ்பாக்கம், மெரினா கடற்கரை, நந்தனம், சைதாப்பேட்டை, சென்ட்ரல் ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்கள் மற்றும் திருவள்ளூர், ஆவடி உட்பட புறநகர் ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!